விராத் கோஹ்லி இல்லாத இந்திய அணியை வென்ற இலங்கை
இந்திய, இலங்கை அணிகளுக்கு இடையிலான நேற்று நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியிடம் தொடர்ச்சியாக 12 ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்து வந்த இலங்கை அணி தற்போது தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மேலும் விராத் கோஹ்லி இல்லாத இந்திய அணியை இலங்கை எளிதில் வென்றுவிட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
நேற்றைய போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த இலங்கை அணி தனது அனல் பறக்கும் பந்துவீச்சால் இந்திய அணியை 112 ரன்களுக்குள் சுருட்டியது. தல தோனி மட்டுமே தனி ஒருவராக போராடி 65 ரன்களை குவித்தார். கேப்டன் ரோஹித் சர்மா உள்பட அனைத்து பேட்ஸ்மேன்களும் நேற்றைய போட்டியில் சொதப்பியதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்
இந்த நிலையில் 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 20.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 114 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 4 விக்கெட்டுக்களை வீழ்த்திய லக்மால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த ஒருநாள் போட்டி வரும் டிசம்பர் 13ஆம் தேதி சண்டிகாரில் நடைபெறும்.
Leave a Reply
You must be logged in to post a comment.