shadow

விரக்தியின் உச்சத்தில் ஓபிஎஸ்: தினகரன்

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் விரக்தியின் உச்சத்தில் இருப்பதாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

நெல்லையில் டிடிவி தினகரனை சந்தித்த செய்தியாளர்கள், தேர்தலுக்குப்பின் உங்கள் தலைமையிலான அணி காணாமல் போய் விடும் என ஓ. பன்னீர் செல்வம் கூறியிருக்கிறாரே, என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்தபோது டிடிவி தினகரன் கடும் ஆவேசம் காட்டினார்.

மேலும் வரும் தேர்தலில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும் டெபாசிட் மட்டுமே வாங்குவார்கள் என்று கூறினார்.
இதுகுறித்து ஓ.பன்னீசெல்வர் கூறியபோது, ‘டிடிவி தினகரன் பகல் கனவு காண்கிறார்’ என்று கூறினார்

Leave a Reply