விமானத்தை கண்டுபிடித்தது இந்தியர்கள் என்று மாணவர்களுக்கு கற்று கொடுங்கள்: மத்திய அமைச்சர்
விமானத்தை கண்டுபிடித்தவர்கள் ரைட் சகோதரர்கள் என்றுதான் இன்று வரை மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால் ரைட் சகோதர்கள் கண்டுபிடிக்கும் முன்னரே இந்தியரான ஷிவாகர் பாபுஜி என்பவர் முதல் விமானத்தை கண்டுபிடித்தார். இந்த விமானம் ரைட் சகோதரர்களின் விமானத்திற்கு எட்டு வருடங்களுக்கு முன்பே தயாரிக்கப்பட்டது. நமது மாணவர்களுக்கு இதுகுறித்து தெரியுமா? ஐஐடி மாணவர்கள் உள்பட அனைத்து மாணவர்களுக்கும் இதை கற்று கொடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் சத்யபால் சிங் அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
மேலும் மாணவர்கள் ராமாயணம் போன்ற இதிகாசங்களில் இடம்பெற்றுள்ள புஷ்பக விமானம் ஆகியவற்றையும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
Leave a Reply
You must be logged in to post a comment.