shadow

விமானத்தில் சக பயணிடம் சண்டை போட்ட தமிழிசை

சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் சக பயணி ஒருவரிடம் வாக்குவாதம் செய்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது

தமிழிசை பயணம் செய்த விமானத்தில் பயணம் செய்த தூத்துக்குடியை சேர்ந்த சோபியா என்ற பெண் விமானத்தின் உள்ளே பாஜகவை விமர்சித்து கோஷமிட்டதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் பின்னர் அங்கிருந்த மற்ற பயணிகள் இருவரையும் சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழிசை கருத்து கூறியபோது, ஏதாவதொரு அமைப்பின் தூண்டுதலால் சோபியா பாஜகவை விமர்சித்திருக்கலாம் என்று கூறினார்.

Leave a Reply