விமானத்தில் இருந்து யூத தம்பதி வெளியேற்றம்: உடலில் துர்நாற்றம் வீசியதால் நடவடிக்கை
அமெரிக்காவில் உள்ளா மிச்சிகனில் பகுதியில் சவுத் பீல்டு என்ற பகுதியை சேர்ந்த 37வது யோச்சி அட்லர் என்பவர் தனது மனைவி ஜென்னியுடன் விடுமுறையை கழிக்க மியாமிக்கு சென்றனர். இவர்களுடன் இவர்களது 19 மாத பெண் குழந்தையும் இருந்தார்.
கடந்த 23ந்தேதி அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இவர்கள் டெட்ராய்டு நகருக்கு புறப்பட்டனர். ஆனால் விமானத்தில் இவர்கள் ஏறிய சிறிது நிமிடங்களில் அவர்கள் 3 பேரும் கட்டாயப்படுத்தி விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
அட்லரின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக சக பயணிகளும், ஊழியர்களும் புகார் தெரிவித்ததாகவும் அதனால் அவர்கள் இறக்கி விடப்பட்டதாகவும் விமான நிர்வாகம் கூறியது. ஆனால் தாங்கள் யூதர்கள் என்பதால் இன விரோதம் காரணமாக தங்களை கீழே இறக்கி விடப்பட்டதாக அட்லர் குற்றஞ்சாட்டியுள்ளார்
Leave a Reply
You must be logged in to post a comment.