விபச்சார கும்பலிடம் மனைவியை கணவரே விற்று கொடுமை
ஆந்திர மாநிலத்தில் பணத்திற்காக விபச்சார கும்பலிடம் மனைவியை அவரது கணவரே விற்று கொடுர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இதுகுறித்து கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை அடுத்து ஒரு கிராமத்து இளம்பெண்ணுக்கும் மல்லிகார்ஜுன் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். சமீபகாலமாக இருவருக்கும் கருத்துவேறுபாடு அதிகரித்ததால் நீதிமன்றம் மூலம் முறைப்படி விவாகரத்து பெற்றனர். அதன்பின்னர் அந்த இளம்பெண் தாய் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் விவாகரத்து பெற்ற அந்த இளம்பெண் சமீபத்தில் ரெட்டியப்பா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால் இரண்டாவது திருமணம் செய்த ரெட்டியப்பா, மனைவிக்கு மும்பையில் நல்ல வேலை கிடைத்துள்ளதாக கூறி தனது நண்பருடன் மும்பைக்கு அனுப்பினார். ஆனால் அவர் அனுப்பியது விபச்சார கும்பலுக்குத்தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
கடந்த 15 மாதங்களாக விபசார விடுதியில் கொடுமையை அனுபவித்த அந்த இளம்பெண் அங்கிருந்து தப்பி தற்போது மதனப்பல்லி டி.எஸ்.பி. சிவானந்தரெட்டியிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் இளம்பெண்ணின் கணவர் ரெட்டியப்பா மற்றும் அவரது நண்பர் நரசிம்மலு மீது நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.