விதிமீறி வைக்கப்பட்ட பேனர்களால் விதிமுடிந்த கல்லூரி மாணவி
சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அரசியல் கட்சிகள் பேனர்கள் வைப்பதால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடந்து வரும் நிலையில் நீதிமன்ற ஆணையை மீறியும் அரசியல் கட்சிகள் பேனர்கள் வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று சென்னை அருகேயுள்ள பள்ளிக்கரணை பகுதியில் சாலை அருகே பேனர்கள் வைக்கப்பட்டிருந்ததால் அதன்மீது மோதிய பிடெக் படித்து வரும் கல்லூரி மாணவி நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனையடுத்து பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியதால் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சென்னை காவல்துறையும் நீதிமன்றமும் பேனர்கள் விஷயத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.