விடைத்தாள் மறுமதிப்பீட்டு ஊழல்: பல்துறை வல்லுநர்கள் குழு வேண்டும்: ராமதாஸ்
விடைத்தாள் மறுமதிப்பீடு ஊழல் அண்ணா பல்கலைக்கழகத்தை மட்டுமின்றி தமிழகத்தையே உலுக்கிய நிலையில் இதுகுறித்த ஊழலை விசாரணை செய்ய பல்துறை வல்லுநர்கள் குழுவை அமைக்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீட்டு ஊழலை விசாரிக்க பல்துறை வல்லுநர்கள் குழுவை அமைக்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். லஞ்ச ஒழிப்பு பிரிவின் மூத்த அதிகாரிகள், உயர்கல்வித்துறை வல்லுனர்கள், கல்வி நிர்வாகிகள் உள்ளிட்டோர் அந்த குழுவில் இடம்பெற வேண்டும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ள
மேலும் இதுகுறித்த விசாரணை முடிவடையும் வரை, இதில் தொடர்புடைய உயர்கல்வித்துறை உயரதிகாரிகளை பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும் ராம்தாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.