விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் காவல்துறையினர் குறித்து அவதூறாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைச்செயலாளர் மலர், வடசென்னை தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் உஷாராணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

ஏற்கனவே எதிர்க்கட்சிகள் மீது வருமான வரித்துறையை ஏவி ஆளுங்கட்சிகள் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதை எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply