விடுதலை சிறுத்தைகள் ஆபத்தான கட்சி: தமிழிசை
பாஜக குறித்து ரஜினி கூறிய கருத்துக்கு பதிலளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ‘”பாம்பை கண்டு படையே நடுங்கும் என்பதால் பாம்பு பலசாலியல்ல படையே நடுங்கும். அந்த அளவிற்கு பாம்பு நஞ்சானது, தீங்கானது; ஆபத்தானது என்றே பொருள் படும். விஷம் கொண்ட பாம்பைப்போல்தான் பாஜகவை பார்க்கிறோம்” என்று கூறியிருந்தார்
திருமாவளவனின் இந்த கருத்துக்கு இன்று பதிலடி கொடுத்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை, ‘பாஜக ஆபத்தானகட்சியா? என ஆராய்ச்சி செய்யும் விசிக தலைவர் தன் கட்சியின் கடந்த காலத்தை மீண்டும் சுயபரிசோதனை செய்ய வேண்டும். முந்தைய கூட்டணிகளில் இவர்களை சேர்த்துக்கொண்டால் நாம் தோற்றுவிடுவோம் எனப் பயந்த கட்சி உங்கள் கட்சி? திருந்தி படி என்று சொல்லாமல் திருப்பி அடிக்கச் சொன்ன ஆபத்தான கட்சி?” என கூறியுள்ளார்
Leave a Reply
You must be logged in to post a comment.