விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் புகார்: கருணாகரன் அதிரடி
சமீபத்தில் நடந்த விஜய்யின் ‘சர்கார்’ பட விழாவின் போது விஜய் பேசிய ஒருசில கருத்துக்கள் குறித்து காமெடி நடிகர் கருணாகரன் தனது டுவிட்டரில் ஒருசில பதிவுகளை பதிவு செய்தார். இந்த பதிவுகளுக்கு விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுக்க, ஒரு கட்டத்தில் இருதரப்பினர்களும் டுவிட்டரில் மோதிக்கொள்ளும் நிலை ஆனது.
இந்த நிலையில், ‘விஜய் ரசிகர்கள் டுவிட்டர், செல்போனில் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர்; அவர்கள் மீது நாளை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிப்பேன் என நடிகர் கருணாகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஒரு பெண் பத்திரிகையாளர் விஜய் ரசிகர் ஒருவர் மீது புகார் கொடுத்ததால் கடந்த சில மாதங்களுக்கு முன் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.