விஜய்-முருகதாஸ் படத்தின் கதை ‘நீட்’ கதையா?
இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதிக்குள் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் கதை தற்போது கொளுந்து விட்டெறியும் நீட் பிரச்சனை குறித்த கதை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் நீட் பிரச்சனை காரணமாக உயிர்நீத்த அனிதா கேரக்டரும் இந்த படத்தில் உண்டா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Leave a Reply
You must be logged in to post a comment.