shadow

விஜய் மல்லையா சொத்துக்கள்: லண்டன் கோர்ட் அதிரடி தீர்ப்பு

இந்தியாவில் உள்ள வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி வரை கடன் பெற்று அதனை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிவிட்ட பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சியில் உள்ளது. இந்த நிலையில் விஜய் மல்லையாவுக்கு சொந்தமாக பிரிட்டனில் உள்ள சொத்துக்களை முடக்க லண்டன் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் மல்லையாவிடம் இருந்து ரூ.10 ஆயிரம் கோடி பாக்கியை வசூலித்து தரும்படி, 13 இந்திய வங்கிகள், இங்கிலாந்து ஐகோர்ட்டின் வணிக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பிரிட்டனில் உள்ள மல்லையாவின் சொத்துக்களை முடக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம், மல்லையா தற்போது தங்கியுள்ள பங்களா உள்பட அனைத்து சொத்துக்களிலும் பிரிட்டன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த முடியும். முன்னதாக, கடந்த மே மாதம் மல்லையாவுக்கு சொந்தமாக உலகம் முழுவதும் உள்ள சொத்துக்களை முடக்க கோர்ட் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளது

Leave a Reply