விஜய் மல்லையாவின் கோரிக்கையை நிராகரித்த லண்டன் கோர்ட்
லண்டனில் இருந்து நாடு கடத்தும் உத்தரவுக்கு தடை கேட்ட விஜய் மல்லையாவின் கோரிக்கையை லண்டன் நீதிமன்றம் நிராகரித்துள்ளது
இந்திய வங்கிகளில் ரூ.9000 கோடி கடன் பெற்று நாட்டை விட்டு தப்பி சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் இருந்த நிலையில் அவரை நாடு கடத்தும்படி சமீபத்தில் லண்டன் கோர்ட் உத்தரவிட்டது.
இந்த நிலையில் லண்டனில் இருந்து நாடு கடத்தும் உத்தரவுக்கு தடை கேட்ட விஜய் மல்லையாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. வங்கிக்கடன் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் சமீபத்தில் லண்டன் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா மேல்முறையீடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.