shadow

விஜய் பேச்சு ஜனநாயகத்திற்கு முரணானது: நாஞ்சில் சம்பத்

nanjil-sampathசமீபத்தில் நடந்த ‘சர்கார்’ ஆடியோ விழாவில் ‘சர்கார் அமைத்துவிட்டு தேர்தலில் நிற்பதாக விஜய் கூறினார். இதுகுறித்து நாஞ்சில் சம்பத் கூறியதாவது:

ஒரு தேர்தலில் நின்று வெற்றி பெற்ற பின்னர்தான் சர்கார் அமைக்க முடியும். ஆனால் விஜய் சர்கார் அமைத்துவிட்டு தேர்தலில் நிற்பதாக கூறுகிறார். இது ஜனநாயகத்திற்கே முரணானது. விஜய் இவ்வாறு சொல்வது ஏன் என்று எனக்கு புரியவில்லை

சர்கார் அமைத்துவிட்டு தேர்தலில் நிற்பது என்றால் இவர் யாரையோ வெற்றி பெற செய்ய பின்னணியில் இருப்பாரோ என்ற சந்தேகம் எழுகிறது.

மேலும் எம்ஜிஆர் மாதிரி விஜய் இருக்கின்றார் என்று கூறமுடியாது. எம்ஜிஆர் எந்த படத்திலும் நடிப்புக்கு கூட சிகரெட் பிடிக்க மாட்டார், மது அருந்த மாட்டார்’

இவ்வாறு பேட்டி ஒன்றில் நாஞ்சில் சம்பத் கூறினார்.

Leave a Reply