விஜய்யின் ‘மெர்சலை’ இரண்டாவது முறையாக முந்தும் நயன்தாராவின் ‘அறம்’
இளையதளபதி விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளும் நிறைவடையும் நிலையில் உள்ளதால் இந்த படத்திற்கான சென்சார் விண்ணப்பம் வரும் வாரம் விண்ணப்பிக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
ஆனால் நயன்தாராவின் ‘அறம்’ சமீபத்தில் சென்சாருக்கு விண்ணப்பிக்கப்பட்டு தற்போது ‘யூ’ சான்றிதழையும் பெற்றுவிட்டது.
அதேபோல் ‘மெர்சல்’ திரைப்படம் தீபாவளி தினத்தில் அதாவது அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. ஆனால் நயன்தாராவின் ‘அறம்’ ஒருநாள் முன்பாகவே அதாவது அக்டோபர் 18ஆம் தேதியே ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.