விஜய்சேதுபதிக்காக காத்திருக்கும் சூர்யா
விஜய்சேதுபதியின் ‘சீதக்காதி’ திரைப்படத்தை பார்க்க தான் காத்திருப்பதாக சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
சீதக்காதி திரைப்படம் வரும் டிசம்பர் 20 முதல் வெளியாகவுள்ளது. நேற்று டிரைலர் வெளியாகி இந்த படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் வழக்கமான விஜய்சேதுபதி படத்தை விட இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்தில் 8 நிமிடத்திற்கு ஒரே ஷாட் இருப்பதாகவும் ஒரு தகவல் வந்துள்ளது. இதுகுறித்து நடிகர் சூர்யா தனது டுவிட்டரில், ‘சீதக்காதி படத்தில் 8 நிமிடங்களுக்கு ஒரே ஷாட்டில் ஒரு காட்சி இருப்பதாக தான் கேள்விப்பட்டேன். அந்த காட்சியை திரையில் பார்க்க நான் மிகவும் ஆர்வமாக காத்திருக்கின்றேன் என்று கூறியுள்ளார்.
இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி, அர்ச்சனா, மகேந்திரன், மெளலி, பகவதி பெருமாள், ரம்யா நம்பீசன், காயத்ரி, பார்வதி நாயர் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.