விஜய்க்கு எதிராக கேரள நீதிமன்றத்தில் வழக்கு.
விஜய் நடித்த சர்க்கார் திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியான நிலையில் இந்த படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது. இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு எதிராக கேரள மாநிலம் திருச்சூர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
திருச்சூர் மாவட்ட சுகாதாரத் துறையின் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் நடிகர் விஜய் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். சர்கார் திரைப்பட விநியோக நிறுவனமான கோட்டயம் சயூஜியம் சினி ரிலீஸ், சன் பிக்சர்ஸ், திருச்சூர் ராம்தாஸ் திரையரங்க உரிமையாளர் ஆகியோர் அடுத்தடுத்த குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
சிகரெட் மற்றும் புகையிலை தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.