விஜயகாந்த் கல்யாண மண்டபத்திற்கு மீண்டும் ஆபத்தா?
திமுக ஆட்சியில் இருந்தபோது கோயம்பேடு பகுதியில் மேம்பாலம் கட்ட விஜயகாந்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது. விஜயகாந்த் எவ்வளவு முயன்றும் திருமண மண்டபத்தின் ஒரு பகுதி இடிக்கப்படுவதை அவரால் காப்பாற்ற முடியவில்லை
இந்த நிலையில் மெட்ரோ ரயில் பணிக்காக அந்த திருமண மண்டபம் முழுவதுமே இடிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது தேமுதிக தலைமை அலுவலகமாக செயல்பட்டு வரும் இந்த மண்டபம் இடிக்கப்பட்டால் தேமுதிகவிற்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும் என தொண்டர்கள் கருதுகின்றனர். மண்டபத்தை காப்பாற்ற விஜயகாந்த் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார் என்பதை அறிய தொண்டர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.