சமீபத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவர் நேற்றே டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார் என்று அவரது மைத்துனர் எல்.கே.சுதீஷ் கூறினார். ஆனால் நேற்று விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா தொற்று பரவி, அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது என்று கூறினார்.
மணப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் உடல்நிலை குறித்து நேரில் கேட்டறிந்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்
Leave a Reply
You must be logged in to post a comment.