திமுக எம்.எல்.ஏ கைது குறித்து ஆர்.எஸ்.பாரதி

வானத்தை நோக்கி சுட்டதற்கு பொய் வழக்கு பதிவு செய்து எம்.எல்.ஏவை கைது செய்துள்ளது திட்டமிட்ட சதிச்செயல் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

மேலும் திமுகவை வன்முறைக் கட்சி எனக்கூறிய அமைச்சர் ஜெயக்குமாருக்கு கண்டனம் தெரிவித்த ஆர்.எஸ்.பாரதி, திமுக எம்.எல்.ஏ சட்டத்தின் முன் நின்று நியாயத்தை நிலைநாட்டுவார் என்றும் தெரிவித்தார்.

முன்னதாக நிலத்தகராறு காரணமாக திருப்போரூர் எம்.எல்.ஏ இதயவர்மன், துப்பாக்கியால் சுட்டதாக கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply