shadow

வாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை – அரசு அறிவிப்பு

முன்னாள் பிரதமரும் கார்கில் போரின் வெற்றி வீரருமான வாஜ்பாய் அவர்கள் இன்று மாலை 5.05 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவால் இந்தியாவே சோகத்தில் மூழ்கியுள்ளது.

இந்த நிலையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை என அரசு அறிவித்துள்ளது. முன்னதாக வாஜ்பாய் மறைவுக்கு 1 வாரம் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது..

மேலும், டெல்லி, பஞ்சாப், புதுச்சேரி புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களும் வாஜ்பாய் மறைவை ஒட்டி, அரசு விடுமுறையை அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply