வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும்: சத்யபிரதா சாஹூ

நாளை தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கான வாக்குகளும், 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்படவுள்ள நிலையில் இதுகுறித்து பேட்டியளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, ‘வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும் என்றும், 36ஆயிரம் காவலர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு வழங்குவர் என்றும் 1,520 துணை ராணுவப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர் என்றும் தெரிவித்தார்

மேலும் ஒவ்வொரு சுற்றுகளின் முடிவும் வர 30 நிமிடங்கள் ஆகும் என்றும், மக்களவை தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வோட்டர் ஹெல்ப்லைன் மொபைல் ஆப் மூலமும் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.

Leave a Reply