வாக்குப்பதிவு இயந்திரத்தை தரையில் போட்டு உடைத்த வேட்பாளர்: பெரும் பரபரப்பு
ஆந்திர மாநிலத்தில் இன்று மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஜனசேனா கட்சி வேட்பாளர் மதுசூதனன் வாக்குப்பதிவு இயந்திரத்தை தரையில் போட்டு உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஜனசேனா கட்சி வேட்பாளர் மதுசூதனன் தனது வாக்கை பதிவு செய்ய வாக்களிக்கும் இடத்திற்கு வந்தபோது அவர் கேட்ட ஒரு தகவலை தேர்தல் அதிகாரி கூறாததால் ஆத்திரமடைந்த அவர் உடனே அங்கிருந்த வாக்குப்பதிவு இயந்திரத்தை தூக்கி தரையில் போட்டு உடைத்தார்
இதனையடுத்து தேர்தல் அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மதுசூதனன் கைது செய்யப்பட்டார்.
Leave a Reply
You must be logged in to post a comment.