வாக்குச்சாவடியை கைப்பற்ற முயன்ற நக்சலைட்டுகள்: துரிதமாக செயல்பட்ட பாதுகாப்பு வீரர்கள்

சத்தீஸ்கரில் வாக்குச்சாவடி அருகே நக்சலைட்டுகள் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்த செய்த் முயற்சி முறியடிக்கப்பட்டது

சத்தீஸ்கர் இன்று காலை முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரு வாக்குச்சாவடியில் திடீரென நக்சலைட்டுகள் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்த முயற்சி செய்தனர்.

உடனே அங்கு பாதுகாப்புக்கு இருந்த பாதுகாப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு நக்சலைட்டுகளை பின்வாங்கச் செய்தனர். இதில் எந்த உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை. இதனால் சில நிமிடங்கள் அந்த பகுதியில் பதட்டமாக இருந்தாலும் தற்போது இயல்பு நிலை திரும்பி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது

Leave a Reply