வாக்குசாவடிகளை கைபற்ற ஓ.பி.எஸ் திட்டமா? டி.ஜி.பி.யிடம் காங்கிரஸ் புகார்

தேனி தொகுதியில் வாக்குச்சாவடிகளை கைபற்ற சதி நடப்பதாக டி.ஜி.பி.யிடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழகம் முழுவதும் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரகுமார் போட்டியிடும் தேனியில் பிற்பகல் 2 மணிக்கு மேல் எதிர்க்கட்சி வேட்பாளர்களையும் அவர்களது ஆதரவாளர்களையும் விரட்டியடித்துவிட்டு வாக்குசாவடிகளை கைபற்ற ஓ.பி.எஸ் தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் புகார் அளித்துள்ளது

டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளித்த பின் காங்கிரஸ் நிர்வாகி தாமோதரன் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

Leave a Reply