நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து நேற்றுடன் பிரச்சாரம் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் பள்ளிகொண்டா சோதனைச்சாவடி அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக பாமகவினர் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது
அவர்கள் வந்த காரை சோதனை செய்தபோது அந்த காரில் வாக்காளர்களுக்கு தருவதாக வைக்கப்பட்டிருந்த 4 லட்சம் பணம் மற்றும் வேட்பாளரின் மாதிரி வாக்குச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
நள்ளிரவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.