shadow

புதிதாக வாங்கப்படும் வாகனங்களுக்கு இடையே 5 ஆண்டுகள் இன்சூரன்ஸ் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இதுவரை புதிதாக வாங்கப்படும் வாகனங்களுக்கு ஓராண்டு மட்டுமே இன்சூரன்ஸ் இருந்தது என்பதும் அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது

நகைக்கடன் – வெளியான தகவல்.!!!

ஆனால் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் விற்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் பம்பர் டு பம்பர் என்ற அடிப்படையில் 5 ஆண்டுகளில் வாகன காப்பீடு செய்வது கட்டாயம் ஆக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

மேலும் வாகன உரிமையாளர் பயணி ஓட்டுநர் ஆகியோருக்கும் அடங்குமாறு இந்த காப்பீடு எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியது தொடர்பாக செப்டம்பர் 30ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.