shadow

வருமான வரித்துறை அலுவலகத்தில் புகழேந்தி ஆஜர்

கடந்த 9ஆம் தேதி முதல் சசிகலாவின் உறவினர்கள், நெருக்கமானவர்கள் ஆகியோர்களின் வீடுகள் மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். ஐந்தாவது நாளாக இன்றும் ஒருசில இடங்களில் சோதனை தொடர்கிறது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கர்நாடக மாநில அதிமுக செயலாளரும் தினகரன் ஆதரவாளருமான புகழேந்தி வீட்டிலும் வருமான வரிச்சோதனை நடைபெற்றது. சோதனைக்கு பின்னர் அவரது வீட்டில் இருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளிக்க அவர் நவம்பர் 13ஆம் தேதி வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சற்றுமுன்னர் புகழேந்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் வருமான வரித்துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Leave a Reply