கமல்ஹாசன் டுவீட்

கொரோனா வைரஸ் பரவல் குறித்து அவ்வப்போது நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது கிராமங்களிலும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவது குறித்து ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

போதுமான வசதிகள் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்கள், நவீன மருத்துவ வசதிகளுக்கு நகரங்களை நோக்கி பயணப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் கிராமங்களில் இத்தொற்றின் பரவல் கவலையளிக்கிறது. வருமுன் தடுத்திட அரசு செயல்பட வேண்டும். வந்த பின் கட்டுப்படுத்துவோம் என்ற எண்ணம் ஆபத்தானது.

இந்த டுவீட் தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply