வந்தியத்தேவன், குந்தவையாக கார்த்தி-கீர்த்திசுரேஷ்

அமரர் கல்கியின் எழுதிய வரலாற்று நாவலான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக்கும் முயற்சியில் உள்ள நிலையில் இந்த நாவலின் ஹீரோ, ஹீரோயினியான வந்தியத்தேவன், குந்தவை கேரக்டர்களில் கார்த்தி-கீர்த்திசுரேஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது

மேலும் நந்தினி என்ற வில்லி கேரக்டரில் ஐஸ்வர்யாராயும், வானதி கேரக்டரில் அனுஷ்காவும் நடிக்கவுள்ளார்களாம். விக்ரம், ஆதித்த கரிகாலன் கேரக்டரிலும், ஜெயம் ரவி, ராஜராஜ சோழன் என்ற அருள்வழிவர்மன் கேரக்டரிலும் நடிக்கவுள்ளார்கள்.

மேலும் ஆழ்வார்க்கடியான், அநிருத்த பிரம்மராயர், சின்ன பழுவேட்டரையர், செம்பியன் மாதவி, மதுராந்தக தேவர், வீரபாண்டியன், பார்த்திபேந்திர பல்லவன், மந்தாகினி, சேந்தன் அமுதன், ஊமை பெண், கந்தமாறன், மணிமேகலை, பூங்குழலி போன்ற கேரக்டர்களுக்கு பொருத்தமான நடிகர், நடிகையர் தேர்வு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது

 

Leave a Reply