shadow

வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டால் கவலையில்லை: தேமுதிக குறித்து அமைச்சர் ஜெயகுமார்

அதிமுக கூட்டணியில் தேமுதிக வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டால் கவலையில்லை என அமைச்சர் ஜெயகுமார் இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

அதிமுக, திமுக என இரு கூட்டணியிலும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் தேமுதிக, கொள்கை அளவில் இல்லாமல் யார் அதிக சீட் கொடுக்கின்றதோ, அந்த கூட்டணியில் இணைய காத்திருக்கின்றது

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார், ‘தேமுதிக கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சி. வராவிட்டால் கவலையில்லை. டோன்ட் ஒர்ரி.. அவ்வளவுதான் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஸ்டாலினே நேரில் சந்தித்து விஜயகாந்திடம் கூட்டணிக்கு வர அழைப்பு விடுத்திருப்பதால் திமுக கூட்டணியில் தேமுதிக இணைய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

Leave a Reply