வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: டென்ஷன் ஆகாத டிரம்ப்

அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பாக அமெரிக்க மற்றும் வட கொரியாவிற்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி இருப்பது கொரிய தீபகற்பத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென் கொரிய மற்றும் அமெரிக்க ராணுவத்தின் கூட்டு ராணுவ பயிற்சிக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் தனக்கு வட கொரியா மீது எந்தவொரு வருத்தமும் இல்லை என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியதால் கடும் நடவடிக்கையை டிரம்ப் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனக்கு வட கொரியா மீது எந்தவொரு வருத்தமும் இல்லை என கூறியது உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது

Leave a Reply