வங்கி கணக்கு தொடங்க ஆதார் கட்டாயமில்லை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வங்கி கணக்கு தொடங்கவும், புதிய சிம் வாங்கவும் ஆதார் கட்டாயமில்லை என்ற சட்ட திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நலத்திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயம் என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, செல்போன் எண் மற்றும் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் அல்ல என்று உத்தரவிட்டது.
இந்த நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும் விதமாக, தொலைத்தொடர்பு சட்டம் மற்றும் பண மோசடி தடுப்புச் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்மூலம், புதிய செல்போன் இணைப்பு பெறவும், வங்கி கணக்கு தொடங்கவும் பொதுமக்கள் தாங்களாக முன்வந்து ஆதார் எண்ணை அளிக்கலாம். இது, அவர்களின் விருப்பத்தை பொறுத்தது ஆகும்.
Leave a Reply
You must be logged in to post a comment.