தமிழகத்தில் பரபரப்பு
தமிழகத்தில் வங்கி ஊழியர்கள் திடீரென வரும் 20ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கொரோனா பாதிப்பு காரணமாக வங்கி பகுதி நேரம் மட்டுமே இயங்கி வரும் நிலையில் ஆகஸ்ட் 1முதல் முழுநேரமும் இயங்க வேண்டும் என்றும் 100 சதவீத ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு வங்கி ஊழியர் கூட்டமைப்பு 20 ஆம் தேதி வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலை 11 மணி முதல் பகல் 2 மணி வரை மட்டுமே வங்கிகள் செயல்பட வேண்டும் என்றும் 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வர அனுமதிக்க வேண்டும் என்றும் கொரோனா வைரஸ் காலத்தில் போக்குவரத்து வசதி எதுவும் இல்லாத நேரத்தில் 100 சதவீத ஊழியர்கள் எப்படி வரமுடியும் என்றும் தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது
இதனை வலியுறுத்தி வரும் 20ஆம் தேதி தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.