வங்கிகளுக்கு ஐந்து நாட்கள் தொடர் விடுமுறையா?
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள், வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதன்காரணமாக நாளை 21 ம் தேதி வங்கி சேவை பாதிக்கப்படும் என தெரிகிறது.
அதேபோல் நாளை மறுநாள். 22 ம் தேதி 4- வது சனிக்கிழமை விடுமுறை நாளாகும். 23 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் விடுமுறை. ஆனால், 24 ம் தேதி திங்கட்கிழமை ஒரு நாள் மட்டும் வங்கிகள் இயங்கும். 25 ம் தேதி, கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதாலும், மறுநாள் 26 ம் தேதி, ஊழியர்கள் ஸ்டிரைக் காரணமாகவும் வங்கிகள் இயங்காது.
அதேநேரம், ஏடிஎம் மையங்கள் இயங்கும் என்பதால், வாடிக்கையாளர்கள், ஒரளவு நிம்மதி அடைந்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.