வகுப்பறையில் தற்கொலை செய்து கொண்ட தமிழக மாணவர்: டெல்லி பல்கலையில் பரபரப்பு
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கிலம் இறுதி ஆண்டு பயின்று வந்த தமிழக மாணவர் ரிஷி ஜோஷ்வா வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பலகலை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மன அழுத்தம் காரணமாக வகுப்பறையில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ரிஷி ஜோஷ்வா தூக்கிட்டு தற்கொலை செய்ததாக தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் டெல்லி நேரு பல்கலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தமிழக மாணவர் ரிஷி ஜோஷ்வாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மாணவரை நேற்று மாலை முதல் காணவில்லை என கல்லூரி நிர்வாகம் தரப்பில் புகார் செய்யப்படுள்ளதாகவும், தற்கொலை செய்வதற்கு முன் ரிஷி ஜோஷ்வா தன்னுடைய பேராசிரியருக்கு மின்னஞ்சல் அனுப்பியதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.