லாபம் தரும் பிள்ளையார் வழிபாடுகள்
எந்த ஒரு காரியத்தையும், தொழிலையும் தொடங்குவதற்கு முன்னால் விநாயகரை வழிபாடு செய்த பின்னால் தொடங்கினால் தடைகள் விலகி நன்மையில் முடியும்.
மண்ணால் செய்த பிள்ளையாரை வழிபட்டால் நற்பதவி கிடைக்கும்.
புற்றுமண்ணால் உருவாக்கிய பிள்ளையாரை வணங்கி வழிபட வியாபார லாபம் கிடைக்கும்.
உப்பினால் உருவான விநாயகரை வணங்கிட எதிரிகள் அழிந்து நிம்மதி பிறக்கும்.
கல்லால் அமைந்த விநாயகரை வணங்கிட வெற்றிகிட்டும்.
வெள்ளெருக்கால் செய்த பிள்ளையாரை வழிபட செல்வம் சேர்ந்து மகிழ்ச்சி நிலவும்.
மஞ்சள் பொடியால் ஆன பிள்ளையாரை வழிபட சகல காரியங்களும் நன்றாக நடக்கும்.
வெல்லத்தினால் செய்யப்பட்ட பிள்ளையாரை வழிபட வாழ்வு வளம்பெறும்.
பசுஞ்சாணியால் உருவாக்கப்பட்ட பிள்ளையாரை வழிபட வியாதிகள் நீங்கி வளம்பிறக்கும்.
Leave a Reply
You must be logged in to post a comment.