லலிதா ஜூவல்லர்ஸ் கொள்ளையர்கள் ஒரே நாளில் பிடிபட்டார்களா?
புதுக்கோட்டையில் பிடிப்பட்ட 6 வடமாநில இளைஞர்களுக்கும், திருச்சி நகைக்கடை கொள்ளைக்கும் தொடர்பில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது என திருச்சி காவல்துறை ஆணையர் அமல்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் லலிதா ஜூவல்லர்ஸ் நகைக்கடை கொள்ளையர்களை விரைவில் பிடித்துவிடுவோம் என்றும் காவல் ஆணையர் அமல்ராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் இன்று 6 வடமாநில இளைஞர்கள் சந்தேகத்துக்கு இடமாக இருந்ததால் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர். ஆனால் இவர்களுக்கும் லலிதா ஜூவல்லர்ஸ் கொள்ளைக்கும் சம்பந்தம் இல்லை என்பது தெரிய வந்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.