shadow

லண்டன் குண்டுவெடிப்பு சம்பவம்: ஒருவர் கைது

நேற்று முன் தினம் லண்டன் சுரங்கப்பாதையில் குண்டுவெடித்து பயங்கர சேதம் அடைந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பிற்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டதாக லண்டன் போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன

கைது செய்யப்பட்டவர் 18 வயது இளைஞர் என்றும் இவரை சந்தேகத்தின் பேரில் லண்டன் போலீஸார் கைது செய்துள்ளதாகவும் இவரிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்ததாக லண்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த சுரங்கப் பாதையின் அருகிலுள்ள டோவர் துறைமுகப் பகுதியில் சந்தேகத்திற்குரிய முறையில் இவர் நடமாடிக்கொண்டிருந்ததார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply