லண்டனில் ஜாலியாக இருக்கும் நீரவ் மோடி? என்ன செய்ய போகிறது மத்திய அரசு?
இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா 9 ஆயிரம் கோடி வங்கிகளில் கடன் பெற்றுவிட்டு லண்டனுக்கு தப்பிச்சென்றுள்ள நிலையில் அதேபோல் வைரவியாபாரி நீரவ் மோடியும் இந்தியாவில் வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்டு வெளிநாடு தப்பி சென்றுள்ளார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் வைர வியாபாரி நீரவ் மோடி லண்டனில் சுதந்திரமாக உலவும் வீடியோவை ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோவில் இருந்து வெளிநாடு தப்பிச் சென்ற நீரவ் மோடி, தற்போது லண்டனில் இருப்பது உறுதியாகியுள்ளது. நீரவ் மோடி லண்டன் சாலையில் நடந்து சென்றதைக் கண்ட அந்த ஆங்கில ஊடக செய்தியாளர் சரமாரி கேள்விகளை கேட்க அதற்கு நீரவ் மோடி அனைத்து கேள்விகளுக்கும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என கூறியுள்ளார்.
இந்திய விவகாரத்தில் உங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்றும், நீங்கள் தற்போதும் வைர வியாபாரம் செய்துவருவதாக கூறப்படுகிறதே எனவும் சரமாரி கேள்விகளை அடுக்கிய செய்தியாளர், லண்டனில் எவ்வளவு நாட்கள் இருப்பீர்கள் என பல கேள்விகளை முன்வைத்தார். ஆனால், அனைத்திற்கும் கருத்து இல்லை என கூறிய நீரவ் மோடி, அவசர அவசரமாக அங்கிருந்து கிளம்பி சென்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.