shadow

ரோஹித் சர்மாவின் விஸ்வரூப பேட்டிங்: 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில் இன்று இந்தூரில் 2வது டி-20 போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் இலங்கை டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 260 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா அபாரமாக விஸ்வரூப பேட்டிங் செய்து 118 ரன்கள் குவித்தார். ராகுல் 89 ரன்கள் எடுத்தார்.

இதனால் வெற்றி பெற 261 ரன்கள் என்ற நிலையில் இலங்கை அணி பேட்டிங் செய்ய ஆரம்பித்தது. ஆனால் சாகல் மற்றும் குல்தீப் அபார சுழல்பந்தில் சிக்கிய இலங்கை அணி 17.2 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சாகல் 4 விக்கெட்டுக்களையும், குல்தீப் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகித்து தொடரை வென்றது.

Leave a Reply