shadow

ரெய்டில் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை: விவேக் சகோதரி கிருஷ்ணபிரியா

கடந்த 9ஆம் தேதிமுதல் சசிகலா குடும்பத்தினர்களின் வீடுகள், அலுவலகங்களில் தொடர் சோதனை நடத்தப்பட்ட நிலையில் தற்போது வருமான வரித்துறை அலுவலகங்களில் சசிகலாவின் உறவினர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளித்து வருகின்றனர்.

இன்று விவேக் மற்றும் அவரது சகோதர் கிருஷ்ணபிரியா வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிகிறது. இந்த கிருஷ்ணபிரியா வீட்டில் தான் பரோலில் வந்த சசிகலா தங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆஜரானது குறித்து கிருஷ்ணபிரியா கூறியதாவது: என் வீட்டில் நடந்த சோதனையில் எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை,
வருமான வரி சோதனை வழக்கமாக நடைபெறுவதுதான்; இதில் அரசியல் இல்லை’ என்று கூறினார்.

Leave a Reply