ரெட் அலர்ட்டை வானிலை ஆய்வு மையம் கொடுக்கவில்லை: பாலசந்திரன்

ரெட் அலர்ட் என்பது வானிலை ஆய்வு மையத்தால் கொடுக்கப்படுவதில்லை என்றும், கனமழைக்கான வாய்ப்புள்ள ஏதேனும் ஒரு பகுதி சிவப்பு நிறத்தில் காண்பிக்கப்படும் என்றும், வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் வரும் ஏப்ரல் 30ம் தேதி வடதமிழகத்தின் கடலோர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், 29, 30 ஆகிய தேதிகளில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்

ஃபனி புயல் கடலூர் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பேரிடர் மீட்புப்படையினர், ஊர்க்காவல்படையினர் தயார் நிலையில் இருக்க காவல்துறை டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Reply