ரூ.31 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை: என்ன காரணம்?
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வரும் நிலையில் நேற்று தங்கத்தின் விலை புதிய உச்சம் தொட்டது
பவுன் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரத்துக்கும் அதிகமாக கடந்த செப்டம்பர் மாதம் தங்கத்தின் விலை இருந்த நிலையில் அதைவிட அதிகமாக நேற்று தங்கத்தின் விலை ரூ.30,520 என விற்பனை ஆனது. இந்த நிலையில் இன்று மேலும் உயர்ந்து ரூபாய் 30 ஆயிரத்து 656 என விற்பனையாகி வருகிறது
சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 136 ரூபாய் அதிகரித்து ரூபாய் 30 ஆயிரத்து 656 என விற்பனையாகி வருவதாக தகவல்கள் வெளியாகின
கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை 768 ரூபாய் 768 உயர்ந்துள்ளதால் தங்கம் வாங்கும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
கடந்த ஆண்டு தங்க முதலீட்டாளர்களுக்கு 20% லாபம் கொடுத்த தங்கம், இந்த ஆண்டு 25 முதல் 30% லாபம் கொடுத்த வாய்ப்பிருப்பதாக தங்க நகை வியாபாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.