shadow

ரூ.3000 கோடி சர்தார் சிலை முட்டாள்தனமானது: பிரிட்டன் எம்பி விமர்சனம்

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லாபாய் பட்டேலுக்கு சமீபத்தில் குஜராஜ் மாநிலத்தில் ரூ.3000 கோடி செலவில் உலகின் மிகப்பெரிய சிலை வைக்கப்பட்டது. இந்த சிலை குறித்த நேர்மறை, எதிர்மறை விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்திய அரசு சர்தார் வல்லபாய் படேலுக்கு ரூ.3000 கோடியில் பிரம்மாண்ட சிலையை எழுப்பியிருப்பது முட்டாள்தனமானது என்று இங்கிலாந்தைச் சேர்ந்த எம்.பி. ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

பிரிட்டன் நாட்டின் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் பீட்டர் போன் என்பவர் இதுகுறித்து மேலும் கூறியபோது, ‘மகளிர் மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட மேம்பாட்டிற்காக கடந்த 5 ஆண்டுகளில் பிரிட்டனிடம் இருந்து இந்தியா சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி பெற்றுள்ளதாகவும், அதேசமயத்தில் இந்தியா மிகப் பெரிய சிலை செய்வதற்கு 3000 கோடி ரூபாய் செலவு செய்திருப்பது முட்டாள்தனமானது என்றும் பீட்டர் போன் கூறினார்.

இந்த அளவுக்கு செலவு செய்து பிரமாண்ட சிலையை அவர்களால் செய்ய முடியும் என்றால், அந்த நாட்டிற்கு நாம் உதவி வழங்க தேவையில்லை என்றும் பீட்டர் குறிப்பிட்டார். இதேபோல் மேலும் சில பிரிட்டன் எம்பிக்களும் இந்தியாவிற்கு நிதியுதவி வழங்கக்கூடாது என்று தங்கள் கருத்தை கூறியுள்ளனர்.

 

Leave a Reply