shadow

ரூ.2000 பணம் பெற ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்: அதிகாரிகள் தவிப்பு

வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு ரூ.2000 வழங்கும் திட்டம் ஒன்றை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பட்ஜெட் கூட்டதொடரில் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன

இந்த நிலையில் வந்தவாசி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம மக்கள் பல ஆயிரம் பேர் திடீரென குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தரப்படும் ரூ.2000 உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அந்த பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் திடீரென குவிந்தனர்

61 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒரே சமயத்தில் குவிந்ததால் அவர்களை சமாளிக்கமுடியாமல் அரசு அதிகாரிகள் தவித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது

Leave a Reply