ரூ.2 கோடி வாய்ப்பை வேண்டாமென மறுத்த சாய்பல்லவி!

நடிகை சாய்பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார் என்பதும், அவரது படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருவதும் தெரிந்ததே

இந்த நிலையில் ஒரு முக அழகை மெருகேற்றும் க்ரீம் நிறுவனம் தனது நிறுவனத்தின் தயாரிப்பு விளம்பர படத்தில் நடிக்குமாறும், அதற்கு ரூ.2 கோடி சம்பளம் தருவதாகவும் சாய்பல்லவியிடம் வியாபாரம் பேசியுள்ளது. ஆனால் ரூ.2 கோடியை பெரிதாக மதிக்காமல் அந்த விளம்பர படத்தில் நடிக்க சாய்பல்லவி மறுத்துவிட்டாராம்

நான் எந்தவொரு அழகுப்பொருட்களையும் விளம்பரப்படுத்த விரும்பவில்லை. உங்கள் மீதும் உங்கள் இயற்கை நிறத்தின் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும். அடுத்தவர் போன்ற கலரை பெற வேண்டும் என்ற எண்ணம் வேண்டாம். எப்பொழுது உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வைத்திருந்தால் போதும்’ என்று கூறியுள்ளார்.

சாய்பல்லவியின் இந்த முடிவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

Leave a Reply