ரூ.10 கோடி கஜா புயல் நிவாரண நிதி கொடுத்த கேரள முதல்வர்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ.10 கோடி நிதி வழங்குவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்.
கஜா புயலில் பாதிக்கப்பட்ட தமிழக சகோதரர்களுக்கு கேரள மக்களின் ஆதரவை தருகிறோம் என்றும், அவசர உதவியாக 10 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வழங்க அமைச்சரவை முடிவு செய்ததாகவும், உணவு, துணி, ஆடைகள் உடபட்ட 14 லாரி அவசர பொருட்கள் ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளதாகவும் கேரள முதல்வர் பினரயி விஜயன் கூறியுள்ளார்.
மேலும் ஆறு மருத்துவ குழுவும் கேரளா மின்சார வாரியத்தை சேர்ந்த 72 ஊழியர்களும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும், தேவை என்றால் மேலும் உதவியை அனுப்ப தயாராக இருப்பதாகவும் கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.