ரிலையன்ஸ் போன்களின் நிலை என்ன? கோடிக்கணக்கில் நஷ்டமாகும் வியாபாரிகள்
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு சேவை திடீரென நிறுத்தப்பட்டதாக வதந்தி பரவி வருகிறது. இதற்கேற்ப ரிலையன்ஸ் போன் வைத்திருப்பவர்கள் யாருக்கும் டவர் கிடைப்பதில்லை என்பதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளது.
டிராய் விதிப்படி ஒரு தொலைத்தொடர்பு நிறுவனம் தங்களுடைய சேவையை உடனடியாக நிறுத்த முடியாது. ஒருவேளை ஒரு நிறுவனம் தங்களது சேவையை நிறுத்த வேண்டும் என்று முடிவு செய்தால் குறைந்தபட்சம் 90 நாட்களுக்கு முன்னரே வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும் ஆதார், கியாஸ், வங்கி என அனைத்திலும் இந்த மொபைல் எண்களை கொடுத்துள்ளதால் அந்நிறுவனமே அதே எண்ணில் வேறு நிறுவனத்தின் சேவையை பெற்றுத்தர வேண்டும்
ஆனால் இது எதுவுமே முறைப்படி நடக்காமல் திடீரென ரிலையன்ஸ் போன் செயல் இழந்துள்ளதால் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் தவித்துள்ளனர். அதுமட்டுமின்றி ரிலையன்ஸ் நிறுவனத்தின் ரீசார்ஜ் கூப்பன்களை ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் கைவசம் இருப்பு வைத்திருப்பவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.5 கோடிக்கான ரீசார்ஜ் கூப்பன் தேங்கியிருப்பதாகவும், அகில இந்திய அளவில் கணக்கிட்டால் பல கோடிகளை தொடும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து மத்திய, மாநில அரசு தங்களுக்கு ஒரு தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து செல்போன் – ரீசார்ஜ் கூப்பன் விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர், விஸ்வநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.